என் கால்கள் ஏப்போதும் உன்னோடு போகும்
என் இதயம் உனக்காக துடிக்கும் பெண்ணே பெண்ணே பெண்ணே
வெட்டி வெட்டி என்னில்
மக்கிப் போன மண்ணில்
ரோஜாச்செடி யார் நட்டதோ
உயிருழ் நுழைந்து உயிரோடு கலக்கிறாய்
நொடியில் என்னுயிரை பறிக்கிறாய்...
வெட்டி .........
புத்தகத்தில் படித்த வார்த்தைகள் எல்லாம் உன் பேர் ஆச்சு
உன்னோடிருந்த நொடிகள் எல்லாம் யுகமாய் ஆச்சு
முதலாய் உன்னை நினைத்தது எப்போ அதையே அறியேன்
மனதுக்குள் உள்ள கவியாகக் கண்டேன்
உயிரதுக்குள்ளே இன்னோர்ருயிர் வந்து ரெட்டை உயிரானால் காதல்
தண்ணீர் நிறம் போல இல்லாமல் போதல் காதல்
உந்தன் விழி ரெண்டும் பார்த்து ரசிக்கத்தான் என் விழி படைத்தான்
படைத்தவன் என் நெஞ்சில் கருவறை கட்டி உன்னை அதற்குள்ளே தைத்தான்
காதல் போல ஒரு பூ நானும் கண்டதில்லை
ஒரு முறை மட்டும் பூக்கும்
உந்தன் விழியிலே சேர்ந்து இமைக்கத்தா கரு மை ஆனேன்
நினைக்கவுமில்லை மறக்கவுமில்லை புத்தம் புது உணர்வு உன்னால்
எங்கு முதல் பார்வை
எங்கு கடைப்பார்வை
தெரியாமல் தவித்து
இசை போல ஒன்று காற்றினிலே வந்தால் அதுதான் காதல்
Comments
Post a Comment