Skip to main content

Posts

Showing posts from January, 2015

குரவளை அறுக்காதே

அறையில் ஒரு குரல் மெதுவாய் அழுது கொண்டிருக்கிறது அத தொலைந்து போன நினைவுகளை தேடி அது சுவாசிக்க காற்றைத்தேடி அது தன் மடியில் தவழ்ந்த மழலையை தேடி தன் கருவில் வளர்ந்த கண்மனி மகவை தேடி படித்து பேர் பெற சென்றமகன் வெடித்து சிதறிவிட்டான் செய்தி கேட்ட தாயுள்ளம் கரு மேகங்களால் சூழ்ந்து விட்டது தன்னிலை மறந்து விட்டது அவள் உயிரில் அவன் பேசிய மழலை வார்த்தைகள் மட்டும் கேட்கிறது அம் மழலை அவ் கல் நெஞ்சக்காரர்களுக்கு என்ன செய்தது மழலைகளின் அழுகை சத்தம் அவர்களின் நெஞ்சை உருக்கவில்லையா அவர்களின் பிஞ்சுக் குரல்கள் அவர்களின் செவியில் விழவில்லையா உரிமைப்போராட்டம் என்ற பெயரில் உறவை அறுப்பதா மதப்போராட்டம் என்ற பெயரில் மழலை உயிரெடுப்பதா பழிக்குப்பழி என்ற பெயரில் பாலகர்களின் பார்வை பறிப்பதா யாருக்குத்தான் லாபம் 100 உயிரெடுப்ப்தால் எதற்கிந்த ஆட்சி மோகம் தாய்மார் கண்ணீர் விடவா அஹிம்சையாய் போராடு அநீதி இழைக்காதே குரல் கொடு குரவளை அறுக்காதே துள்ளி எழு துப்பாக்கி தூக்காதே ஆட்சி செய் ஆணவம் காட்டதே சத்தம் கொடு சர்வாதிகரம் செய்யாதே கொள்கை பரப்பு கொலை செய்து விடாதே சிறந்த நாளில் சிறுவர்களுக்கான துஆக்களுடன் ஹ...

ஏதோ அது ஏதோ

பூமியை நிலா போல் சுற்றினாயே கண்ணை கண்கொண்டு கடைந்தாயே என்னுயிரில் உன்னுயிர் சேர்த்தாயே வயதில் வன்முறைகள் செய்தாயே என்னை உன்வசம் ஈர்த்தாயே இமைகள் மூடாமல் கனவு கண்டேன் கால்கள் உன் வழியில் போக கண்டேன் சுவாசம் புதிதாய் ஆக கண்டேன் பெண்ணாய் பிறந்த பெருமை கண்டேன் ஏதோ அது ஏதோ எந்தன் கண்ணில் விழுந்தது ஏதோ அது ஏதோ எந்தன் நெஞ்சை இறுக்கிய கயிறது ஏதோ அது ஏதோ உயிரில் கலந்தது ஏதோ அது ஏதோ அது காதல் முடிவில்லாப் பாடல் நெஞ்சம் ரெண்டும் மோதல் மருந்தில்லா காயம் மனதை தொடும் மாயம்

மின்னலில் புகைப்படம்

அவள் கை கோர்த்து மழையில் நனைய வேண்டும் அவள் நெற்றி மீது சிறுதுளியாய் விழ வேண்டும் மின்னலில் புகைப்படமெடுத்த ு உடல்களை தீயாக்க வேண்டும் துளி உரசிடும் இடமெல்லாம் அவள் ஸ்பரிசம் வேண்டும் முழக்கங்ள் இசையாகி அதற்கேற்றால் போல் ஆடிடவேண்டும் இவை எல்லாம் என் கானல் மழையில் என்று தெரியும் இருப்பினும் அவளோடு வாழும் கற்பனை கூட ஒரு இன்ப மழைதான் என் நெஞ்சில்